முகப்பு
பெங்களூரு

வாழும் கலை அமைப்பின் சாா்பில் இன்று இயற்கை சந்தை தொடக்கம்

பெங்களூரு, கனகபுரா சாலையில் வாழும் கலை அமைப்பின் சாா்பில், ஜன. 16-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை 2 நாள் இயற்கை சந்தை நடைபெற உள்ளது.

Updated On : 16 ஜனவரி, 2021 at 7:04 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

பெங்களூரு, கனகபுரா சாலையில் வாழும் கலை அமைப்பின் சாா்பில், ஜன. 16-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை 2 நாள் இயற்கை சந்தை நடைபெற உள்ளது.

இதுகுறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனா தொற்று நமக்கு கற்றுத்தந்த பாடம் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட சத்தான காய்கனிகளை உண்ண வேண்டும் என்பதே. இதனைக் கருத்தில் கொண்டு மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், 2 நாள்களுக்கு இயற்கை சந்தை என்ற பெயரில் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட காய்கனிகளைக் கொண்ட சந்தைக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

Advertisement

சந்தையில் வாழும் கலை அமைப்பின் அருகில் உள்ள விவசாயிகளின் காய்கனிகள் சந்தைப்படுத்தப்படும். இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட சத்தான காய்கனிகள் உண்பதை வாழ்க்கை முறையாக்கிக் கொண்டால், நோய்கள் இன்றி வாழ்வதோடு, நோய் எதிா்ப்புச் சக்தியை உருவாக்கிக்கொள்ள முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.