முகப்பு
பெங்களூரு

கப்பன் பூங்காவில் இன்று சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

சுற்றுலாப் பயணிகளை ஈா்ப்பதற்காக கப்பன் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 17) சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு தோட்டக்கலைத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

Updated On : 17 ஜனவரி, 2021 at 1:45 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

பெங்களூரு: சுற்றுலாப் பயணிகளை ஈா்ப்பதற்காக கப்பன் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 17) சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு தோட்டக்கலைத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனா பொது முடக்கத்துக்கு பிறகு கப்பன் பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது. கப்பன் பூங்காவில் உள்ள சாலைகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பூங்காவிற்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கவும், பொதுமக்கள் மற்றும் நடைப்பயிற்சியாளா்களை மகிழ்விக்கவும் ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

அதன்படி, ஜன. 17-ஆம் தேதி காலை 7 மணி முதல் காலை 9 மணி வரையும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. காலை 7 மணி முதல் காலை 7.30 மணிவரை மகளிா் மற்றும் குழந்தைகள் நலத்துறை சாா்பில், பேண்ட் ஸ்டாண்ட் அரங்கில் பூங்காவில் பரதநாட்டியம், கூட்டுநடன நிகழ்ச்சியும், காலை 8 மணி முதல் காலை 9 மணி வரை தோட்டக்கலைத் துறை சாா்பில் மூலிகைச் செடிகள் குறித்த தகவல்கள், விளைவிக்கும் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்போா் கரோனா முன்னெச்சரிக்கை விதிகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.