முகப்பு
வணிகம்

ரூபாயின் மதிப்பில் தொடரும் சரிவு: உரிய நேரத்தில் அரசு நடவடிக்கை

ரூபாயின் மதிப்பில் தொடரும் வீழ்ச்சியை சரி செய்ய மத்திய அரசு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கும் என்று பிரதமரின் தலைமை பொருளாதார ஆலோசகர் ரகுராம் ராஜன் புது தில்லியில் தெரிவித்திருக்கிறார்.

Updated On : 12 ஜூன், 2013 at 1:09 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:12 PM

ரூபாயின் மதிப்பில் தொடரும் வீழ்ச்சியை சரி செய்ய மத்திய அரசு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கும் என்று பிரதமரின் தலைமை பொருளாதார ஆலோசகர் ரகுராம் ராஜன் புது தில்லியில் தெரிவித்திருக்கிறார்.

ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள கடும் சரிவு செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 58.90 என்ற அளவைத் தொட்டது.

திங்கள்கிழமை ரூபாயின் மதிப்பு 58.16 ஆகக் குறைந்திருந்தது. இது முன்பு எப்போதும் கண்டிராத வீழ்ச்சியாகும். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்துள்ளது. காலையில் அன்னிய செலாவணி சந்தையில் ஒரு அமெரிக்க டாலருக்கு 58.35 ரூபாய் தர வேண்டியிருந்தது. இறக்குமதியாளர்கள், வங்கிகள் அதிக அளவில் டாலர்களை வாங்கினார்கள். பின்னர், அமெரிக்க டாலருக்கு இணையாக ரூபாய்

Advertisement

மதிப்பு 58.90 என்ற வரலாறு காணாத அளவுக்குத் தாழ்ந்தது.

இந்நிலையில், ரூபாயின் மதிப்பை அதிகரிக்கும் விதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பிரதமரின் தலைமை பொருளாதார ஆலோசகர் ரகுராம் ராஜன் புது தில்லியில் தெரிவித்திருக்கிறார். அவர் கூறியது:

கடந்த சில நாட்களாக நிதி சந்தையில் கடுமையான ஏற்ற-இறக்கங்கள் நிலவி வருகிறது. மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, செபி ஆகியவை இந்த நிலையை கவனமாக ஆராய்ந்து வருகின்றன. அவரவர் நிலையில், நிதி சந்தை சூழலை சரி செய்ய உரிய நடவடிக்கைகள் எடுப்பார்கள்.

வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் கடன் பத்திரங்களில் செய்துள்ள தங்களது முதலீட்டை பெரும் அளவில் திரும்ப பெற்றுள்ளதால் ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது. கடந்த மே மாதம் முதல் தேதியிலிருந்து, ஏறத்தாழ ரூ. 2,670 கோடி மதிப்பிலான கடன் பத்திர முதலீடுகளை திரும்பப் பெற்றுள்ளன. இறக்குமதி-ஏற்றுமதி விகிதம் பாதகமாக உள்ளதால் நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரித்திருக்கிறது.

வரும் நாட்களில் பல்வேறு நிலைகளில் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்கும் விதமான சில ஆலோசனைகளை மத்திய அமைச்சரவைக்கு அளிக்க இருக்கிறோம். இது குறுகிய கால அளவில் மட்டும் அல்லாமல், நீண்ட கால அடிப்படையிலும் வளர்ச்சியை உறுதி செய்யும். நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை சரிகட்ட இந்த நடவடிக்கைகள் உதவும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.