முகப்பு
வணிகம்

பங்குச் சந்தையில் 55 புள்ளிகள் அதிகரிப்பு

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 55 புள்ளிகள் அதிகரித்து சென்செக்ஸ் குறியீட்டெண் 18,774 என்ற அளவில் நிலைத்தது.

Updated On : 21 ஜூன், 2013 at 11:12 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:13 PM

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 55 புள்ளிகள் அதிகரித்து சென்செக்ஸ் குறியீட்டெண் 18,774 என்ற அளவில் நிலைத்தது.

வியாழக்கிழமை 526 புள்ளிகள் வீழ்ச்சியைக் கண்ட பின்பு பங்குச் சந்தையில் லாபகரமான போக்கு காணப்பட்டது. ரூபாயின் மதிப்பை சரி கட்டுவதற்கு ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கை பங்கு முதலீட்டாளர்களை சற்று ஆறுதல் அடையச் செய்தது. சில குறிப்பிட்ட துறை நிறுவன பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டியதால் பங்குச் சந்தையில் முன்னேற்றம் காணப்பட்டது.

தகவல் தொழில்நுட்பம், ஆட்டோ மொபைல் துறை நிறுவனப் பங்குகள் வரவேற்பை பெற்றன. எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனப் பங்குகளுக்கும் வரவேற்பு இருந்தது. உலோகம், வீட்டு வசதி, நுகர்வோர் பொருள் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து சரிவுப் பாதையிலேயே இருந்தன.

Advertisement

சென்செக்ஸில் பட்டியலிடப்பட்டுள்ள 30 முக்கிய நிறுவனங்களில் 16 நிறுவனங்களின் பங்குகள் லாபத்தில் விற்பனை ஆகின. 13 நிறுவனங்களின் பங்குகள் நஷ்டம் அடைந்தன. ஐ.டி.சி. பங்கு விலையில் எந்த மாற்றமும் இல்லை. தேசிய பங்குச் சந்தையிலும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் லேசான முன்னேற்றம் இருந்தது. வர்த்தக முடிவில் 11 புள்ளிகள் அதிகரித்து நிஃப்டி குறியீட்டெண் 5,667 என்ற அளவைத் தொட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.