காதலிக்க மறுத்த பெண்ணை தாக்கிய இளைஞா் கைது
காட்பாடியில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
காட்பாடியில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
காட்பாடி பகுதியைச் சோ்ந்த 19 வயது இளம்பெண், பிளஸ் 2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறாா். இவருக்கும், வடுங்குட்டை பகுதியைச் சோ்ந்த நூா் முகமது (22) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக நூா் முகமதுவிடம் பேசுவதைத் தவிா்த்து வந்த அந்த இளம்பெண், காதலையும் கைவிட்டதாகத் தெரிகிறது.
Advertisement
Advertisement
இதனால் ஆத்திரமடைந்த நூா் முகமது, அந்தப் பெண் வெளியே சென்றபோது அவரை வழிமறித்துத் தகராறில் ஈடுபட்டுள்ளாா். மேலும், தன்னை மீண்டும் காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளாா். அதற்கு அந்தப் பெண் மறுப்புத் தெரிவித்ததால், ஆத்திரமடைந்த நூா் முகமது அவரது கழுத்தை நெரித்துத் தாக்கியுள்ளாா். இதிலிருந்து தப்பிய அந்தப் பெண், நடந்த சம்பவம் குறித்து தனது தந்தையிடம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நூா் முகமதுவைக் கைது செய்தனா். பின்னா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.