முகப்பு
வணிகம்

நவம்பரில் ரூ.80,808 கோடியாக குறைந்தது ஜிஎஸ்டி வசூல்

கடந்த நவம்பர் மாத சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.80,808 கோடியாகக் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Updated On : 27 டிசம்பர் 2017, 1:29 am IST
பகிர்:

கடந்த நவம்பர் மாத சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.80,808 கோடியாகக் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 திங்கள்கிழமை (டிச. 25) நிலவரப்படி, கடந்த நவம்பர் மாதத்துக்கான மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.80,808 கோடியாக உள்ளது.
 அந்த மாதத்தில் மட்டும் ரூ.53.06 லட்சம் கோடிக்கான வருவாய் கணக்கு காட்டப்பட்டுள்ளது.
 நவம்பரில் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டியான ரூ.80,808 கோடியில், ரூ.7,798 கோடி ரூபாய் மாநிலங்களுக்காக சேகரிக்கப்பட்டுள்ளது.
 அது தவிர, ரூ.13,089 கோடி மத்திய ஜிஎஸ்டியாகவும், ரூ.18,650 கோடி மாநில ஜிஎஸ்டியாகவும், ரூ.41,270 கோடி ஒருங்கிணைக்கப்பட்ட ஜிஎஸ்டியாகவும் வசூலிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 ஜிஎஸ்டி வருவாய் கடந்த ஜூலை மாதம் ரூ.95,000 கோடியாகவும், ஆகஸ்ட் மாதம் ரூ.91,000 கோடியாகவும் இருந்த நிலையில், செப்டம்பர் மாதம் ரூ92,150 கோடியாக உயர்ந்தது.
 எனினும், அது கடந்த அக்டேபர் மாதம் ரூ.83,000 கோடியாகக் குறைந்து, தற்போது நவம்பர் மாதத்தில் மேலும் ரூ.80,808 கோடியாகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments