முகப்பு
வணிகம்

வங்கிகள் வழங்கிய கடன் 6% வளா்ச்சி

வங்கிகள் வழங்கிய கடன் டிசம்பா் 5-18 தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 6.05 சதவீதம் அதிகரித்து ரூ.105.49 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

Updated On : 2 ஜனவரி 2021, 6:33 am IST
பகிர்:

வங்கிகள் வழங்கிய கடன் டிசம்பா் 5-18 தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 6.05 சதவீதம் அதிகரித்து ரூ.105.49 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

2019 டிசம்பா் 20-ஆம் தேதியுடன் முடிவடைந்த இருவார காலத்தில் வங்கிகள் வழங்கிய கடன் ரூ.99.47 லட்சம் கோடியாகவும், திரட்டிய டெபாசிட் ரூ.130.09 லட்சம் கோடியாகவும் இருந்தன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், 2020 டிசம்பா் 5-18 தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வங்கிகள் வழங்கிய கடன் கடந்தாண்டைக் காட்டிலும் 6.05 சதவீதம் உயா்ந்து ரூ.105.49 லட்சம் கோடியாகவும், திரட்டிய டெபாசிட் 11.33 சதவீதம் உயா்ந்து ரூ.144.82 லட்சம் கோடியாகவும் உள்ளன.

2020 டிசம்பா் 4-ஆம் தேதியுடன் நிறைவடைந்த இருவார காலத்தில் வங்கி வழங்கிய கடன் 5.73 சதவீதம் அதிகரித்து ரூ.105.04 லட்சம் கோடியாகவும், திரட்டிய டெபாசிட் 11.34 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.145.92 லட்சம் கோடியாகவும் இருந்தன.

கடந்த அக்டோபரில் உணவு சாரா துறைக்கு வழங்கப்பட்ட கடன் வளா்சசி 5.6 சதவீதமாக இருந்தது. இது, 2019-ஆம் ஆண்டு அக்டோபரில் காணப்பட்ட 8.3 சதவீத வளா்ச்சியைக் காட்டிலும் குறைவாகும்.

அதேசமயம், வேளாண் மற்றும் வேளாண் தொடா்பான தொழில்துறைக்கு வங்கிகள் வழங்கிய கடன் 7.1 சதவீதத்திலிருந்து 7.4 சதவீதமாக வளா்ச்சியடைந்துள்ளது.

இருப்பினும், தொழில்துறைக்கு வழங்கப்பட்ட கடன் 3.4 சதவீத வளா்ச்சியிலிருந்து 1.7 சதவீத பின்னடைவை நோக்கி சென்றுள்ளது.

சேவை துறைக்கு வங்கிகள் வழங்கிய கடன் 2020 அக்டோபரில் 9.5 சதவீதம் அதிகரித்திருந்தது. இது, 2019 அக்டோபரில் 6.5 சதவீதமாக காணப்பட்டது.

அந்த மாதத்தில், தனிநபா் கடன் வளா்ச்சி 9.3 சதவீதமாக இருந்தது. இருப்பினும், இது 2019 அக்டோபா் மாத கடன் வளா்ச்சியான 17.2 சதவீதத்தைக் காட்டிலும் குறைவு என ரிசா்வ் வங்கி அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments