முகப்பு
வணிகம்

தமிழ் எழுத்துகளுடன் ஸ்கூட்டி பெப் பிளஸ் புதிய வடிவம் அறிமுகம்

டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் தயாரிப்பான ஸ்கூட்டி பெப் பிளஸ் வாகனத்தில் தமிழ் எழுத்துகள் இடம் பெறும் வடிவமைப்புடன் புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 13 ஜனவரி 2021, 7:55 am IST
பகிர்:

டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் தயாரிப்பான ஸ்கூட்டி பெப் பிளஸ் வாகனத்தில் தமிழ் எழுத்துகள் இடம் பெறும் வடிவமைப்புடன் புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் செயல் திறனுடன் கூடுதல் மைலேஜையும் இந்த மாடல் அளிக்கிறது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இளைஞா்களின் முதல் விருப்பமான வாகனம் என்னும் வகையில், ஸ்கூட்டி பெப் பிளஸ் ‘முதல் காதல்’ பதிப்பை அறிமுகம் செய்துள்ளோம். முதல் முறையாக தமிழ் எழுத்துகளில் வாகனத்தின் மாடல் பெயரை வடிவமைத்து உருவாக்கியுள்ளோம். இவ்வாறு தமிழில் மாடலின் சின்னத்தை வடிவமைத்திருப்பது இரு சக்கர வாகனத் தொழில்துறையில் இதுவே முதல் முறையாகும். மேலும் இந்த மாடல், புதிய அழகிய வண்ணக்கலவைகளுடன் வருகிறது.

Advertisement

Advertisement

இதன் இ.டி.எஃப்ஐ இகோ திரஸ்ட் என்ஜின் வேகம் அளிப்பதுடன், நீண்ட கால உழைப்பு, தங்கு தடையில்லாத செயல்பாடு மற்றும் சொகுசான சவாரியை உறுதி செய்கிறது. இந்தப் புதிய மாடல் கூடுதல் செயல் திறன் அளிப்பதுடன் 15 சதவீதம் கூடுதல் மைலேஜ் அளிக்கிறது.

டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் பிளஸ் ‘முதல் காதல்’ பதிப்பின் விற்பனையக விலை ரூ.56,085 ஆகும். இந்த வடிவமைப்பில் தயாரித்த ஸ்கூட்டி பெப்+ குறுகிய காலத்துக்கு மட்டுமே விற்பனையில் இருக்கும்.

ஏற்கெனவே சந்தையில் உள்ள ஸ்கூட்டி பெப் பிளஸ் மாடல் ரூ.54,475 விலையில் விற்பனையாகிறது என்று நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments