"ஆய்வுப் பணிகளை மாணவர்கள் மேற்கொள்வது கட்டாயமாக்கப்படும்'
வரும் கல்வியாண்டில் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஆய்வுப்பணிகளை மேற்கொள்வது
வரும் கல்வியாண்டில் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஆய்வுப்பணிகளை மேற்கொள்வது கட்டாயமாக்கப்படும் என்று எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பச்சமுத்து கூறினார்.
காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற ஆராய்ச்சி தின விழாவில் அவர் மேலும் பேசியது:-
தற்போது உயர்கல்வி பெறும் மாணவர்களில் ஒரு சதவிகிதம் பேர்தான் ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.
Advertisement
எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களின் ஆய்வுத்திறனை மேம்படுத்தும் வகையில் சிறந்த ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளும் மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்தில் 50 சதவீத சலுகை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
இந்திய அரசின் உயிரி தொழில்நுட்பத்துறை ஆலோசகர் டாக்டர் எஸ்.ஆர்.ராவ் பேசும்போது, சீனா,கொரியாவை ஒப்பிடுகையில் ஆய்வுத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி மிகவும் குறைவாக உள்ளது. இந்தியாவில் ஆய்வு நடவடிக்கைகள் அதிகரிக்க கட்டமைப்பு, முதலீடு ஆகியவற்றை மேம்படுத்துவதுடன் மாணவர்களின் ஆர்வமும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றார்.
தேசிய விஞ்ஞான கழகத் தலைவர் கிருஷ்ணன்லால், எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக இணை துணைவேந்தர் டி.பி.கணேசன், இயக்குநர் சி.முத்தமிழ்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.