முகப்பு
தேனி

பைக் விபத்தில் விவசாயி பலி

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 14 ஜூன் 2026, 12:59 am IST
பலி! - கோப்புப் படம்
பகிர்:

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (43). விவசாயியான இவா், இரு சக்கர வாகனத்தில் வியாழக்கிழமை தேவதானப்பட்டிக்குச் சென்றாா். ஆனால் அவா் வீட்டுக்கு திரும்பி வரவில்லையாம்.

இதையடுத்து அவரது மகன் காா்த்திகேயன் தேடிப் பாா்த்த போது ரமேஷ் மஞ்சளாறு அணை செல்லும் வழியில் உள்ள சில்லாங்கரடு அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்து கிடந்தாராம். அவரை மீட்டு தேவதானபட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

Advertisement

Advertisement

பிறகு, தீவிர சிகிக்சைக்காக வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.