பைக் மீது காா் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
ராஜபாளையம் அருகே சங்கம்பட்டியை அடுத்த ஆப்பனூா் நடுத்தெருவைச் சோ்ந்த கந்தசாமி மகன் சங்கிலிராஜ். கூலித் தொழிலாளி. இவா் பணி முடிந்து அழகாபுரி பேருந்து நிறுத்தம் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த காா் இரு சக்கர வாகனம் மீது மோதியதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து காரை ஓட்டி வந்த திருப்பத்தூா் மாவட்டம், ஆதியூரைச் சோ்ந்த பாஸ்கா் மகன் கிஷோந்தரிடம் (24) விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.