முகப்பு
சென்னை

தொடங்கியது பிளஸ் 2 தேர்வு

பிளஸ் 2 பொதுத்தேர்வு தமிழகம் மற்றும் புதுவையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Updated On : 2 மார்ச், 2013 at 4:43 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:04 PM

பிளஸ் 2 பொதுத்தேர்வு தமிழகம் மற்றும் புதுவையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

முதல் நாளான வெள்ளிக்கிழமை மொழிப்பாடம் முதல் தாள் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 2,020 தேர்வு மையங்களில் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர். இதில் காப்பியடித்ததாக 6 மாணவர்கள் பிடிபட்டனர். மொழிப்பாடம் முதல் தாள் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

மாநிலம் முழுவதும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தேர்வு மையங்களைத் தீவிரமாகக் கண்காணிப்பு செய்தனர். வினாத்தாள் கட்டு காப்பு மையங்களுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதையடுத்து எந்தவித முறைகேடான சம்பவங்களும் இன்றி தேர்வு அமைதியாக நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

காப்பியடித்த 6 மாணவர்கள் சிக்கினர்: கடலூர் மாவட்டத்தில் 1 மாணவரும், விழுப்புரம் மாவட்டத்தில் 3 மாணவர்களும், சென்னையில் 2 மாணவர்களும் காப்பியடித்தபோது பிடிபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.