முகப்பு
சென்னை

கடலில் குதித்து போலீஸ்காரர் தற்கொலை

சென்னையில் போலீஸ்காரர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

Updated On : 22 ஏப்ரல் 2013, 4:01 am IST
பகிர்:

சென்னையில் போலீஸ்காரர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை அண்ணாசாலை காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வந்தவர் பிலிப் (33). இவர் திருவல்லிக்கேணி காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

அவருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவுப் பணி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் காலை 8 மணிக்கே வீட்டில் இருந்து புறப்பட்டு விட்டார். பின்னர் பகல் 12 மணியளவில் அவரது மனைவி ஜெயந்திக்கு (28) போன் செய்த பிலிப், தான் வீட்டுக்கு வரமாட்டேன் என்றும் தற்கொலை செய்துக் கொள்ளப் போகிறேன் என்றும் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்து  செல்போனை அணைத்து விட்டாராம்.

Advertisement

Advertisement

பின்னர் பிற்பகல் 2 மணியளவில் மெரினா கடற்கரையில் கடலை நோக்கி சென்ற அவர், நீரில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விசாரித்ததில், கணவன் மனைவிக்கு இடையில் பெரிதாக பிரச்சனை எதுவும் இல்லை என்றும், காலையில் கிளம்பும் போது சிறிய தகராறு ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

பிலிபின் உடலை மீட்ட போலீஸார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பிலிப்-ஜெயந்திக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.