பள்ளிப்பட்டில் சமூகநலக் கூடம் கட்டும் பணி தொடக்கம்
அடையாறு மண்டலத்துக்கு உள்பட்ட 172-வது வார்டு பள்ளிப்பட்டில் ரூ.1.36 கோடி செலவில் சமூகநலக் கூடம் கட்டும் பணிகள் புதன்கிழமை (மே 1) தொடங்கப்பட்டன.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:09 PM
அடையாறு மண்டலத்துக்கு உள்பட்ட 172-வது வார்டு பள்ளிப்பட்டில் ரூ.1.36 கோடி செலவில் சமூகநலக் கூடம் கட்டும் பணிகள் புதன்கிழமை (மே 1) தொடங்கப்பட்டன.
இரண்டு தளங்கள் கொண்ட இந்த சமூக நலக் கூடத்தின் கட்டுமானப் பணிகளை மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார். விழாவில் சிட்லபாக்கம் ராஜேந்திரன் எம்.பி. மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.