முகப்பு
உலகம்

அமெரிக்க பி-52 குண்டுவீச்சு போர் விமானம் விபத்து: 8 பேர் பலி

அமெரிக்க பி-52 குண்டுவீச்சு போர் விமானம் விபத்துள்ளானது தொடர்பாக...

Updated On : 16 ஜூன் 2026, 8:36 am IST
விமான விபத்து நடந்த இடம். - படம்: AP
பகிர்:

தெற்கு கலிபோர்னியாவின் மொஜாவே பாலைவனத்தில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தில், பி-52 ரக குண்டுவீச்சு விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளாகித் தீப்பிடித்து எரிந்ததில், அதில் பயணம் செய்த 8 பேரும் பலியானதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

லாஸ் ஏஞ்சலீஸுக்கு வடக்கே அமைந்துள்ள எட்வர்ட்ஸ் விமானப்படைத் தளத்தில், வழக்கமான சோதனைப் பயணத்தின்போது, விபத்துக்குள்ளான அந்த விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

விமானத்தில் இருந்தவர்களில் அரசு ஒப்பந்தத பணியாளர்கள், சீருடை அணிந்த ராணுவத்தினரும் அடங்குவர்.

Advertisement

Advertisement

விபத்து தொடர்பான காணொளிக் காட்சிகளை ஆய்வு செய்ததில், இதில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக எட்வர்ட்ஸ் தளத்தில் உள்ள 412-வது சோதனைப் பிரிவின் துணைத் தளபதி கர்னல் ஜேம்ஸ் ஹேய்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"நாங்கள் 8 சிறந்த அமெரிக்கர்களை இழந்துவிட்டோம்" என்று கூறிய ஹேய்ஸ், அவர்களின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை என்றும், இது குறித்த விசாரணையை நிறைவு செய்ய 6 மாதங்கள் வரை ஆகலாம் என்றும் ஹேய்ஸ் கூறினார்.

1950-ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட பி-52 குண்டு வீச்சு விமானங்கள், அமெரிக்கப் படைகளால் பயன்படுத்தப்படுகிறது. இது, வியட்நாம் முதல் ஈரான் வரையிலான அமெரிக்க ராணுவத்தின் தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

summary

Aerial footage showed virtually nothing left of the aircraft that went down around 11:20 a.m. during a routine test mission at Edwards Air Force Base, which is north of Los Angeles

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.