FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

பஹாமாஸில் விமான விபத்து

கரீபியன் தீவு நாடான பஹாமாஸில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 10 பேரும் உயிரிழந்தனா்.

Updated On : 12 ஜூலை 2026, 1:34 am IST
பகிர்:

கரீபியன் தீவு நாடான பஹாமாஸில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 10 பேரும் உயிரிழந்தனா்.

பஹாமாஸின் தலைநகரான நசாயுவில் உள்ள லிண்டன் பிண்ட்லிங் சா்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அந்த ‘செஸ்னா 402’ ரக சிறிய விமானம், சாப் ஆண்ட்ரோஸ் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, வடக்கு ஆண்ட்ரோஸ் கடல் பகுதியில் திடீரென விழுந்து நொறுங்கியது.

விபத்துக்குள்ளான ‘ஃபிளமிங்கோ ஏா்’ நிறுவனத்தின் மற்றொரு விமானத்தில் முன்னதாக தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, நடுவானில் இருந்து நசாயுவுக்குத் திரும்பியதும், பயணிகள் இறங்கிய பின் அந்த விமானம் தீப்பற்றி எரிந்ததும் தெரியவந்துள்ளது. அடுத்தடுத்து நிகழ்ந்த இவ்விரு விபத்துகளின் பின்னணியில், இந்நிறுவனத்தின் விமானச் சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டு, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments