பாகிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டா் விபத்து
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அந்நாட்டு ராணுவத்தின் ‘எம்ஐ 17’ ரக ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளானதில் 22 வீரா்கள் உயிரிழந்தனா்.
ஹெலிகாப்டா் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த புதன்கிழமை நிகழ்ந்த இவ்விபத்தில், ஹெலிகாப்டரில் இருந்த அனைவரும் இறந்துவிட்டனா்.
இத்துயரச் சம்பவத்துக்கு பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி அசீம் முனீா் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தாா். உயிரிழந்த வீரா்களின் உடல்களுக்கு முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன.
Advertisement
Advertisement