முகப்பு
சென்னை

கோடையைச் சமாளிக்க லாரிகளில் குடிநீர் விநியோகம் அதிகரிப்பு

கோடைகால குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய லாரிகள் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

Updated On : 12 மே, 2013 at 3:13 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:10 PM

கோடைகால குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய லாரிகள் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

இதற்காக 3 மாத ஒப்பந்த அடிப்படையில் 21 டேங்கர் லாரிகளை கூடுதலாக குடிநீர் விநியோகப் பணிகளுக்கு அமர்த்தியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து குடிநீர் வாரியத்தின் மேலாண் இயக்குநர் பி.சந்திரமோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

Advertisement

மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகத்துக்காக 9 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 231 லாரிகளும், 6 ஆயிரம் கொள்ளளவு கொண்ட 104 லாரிகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

கோடை காலத்தில் குடிநீர்த் தேவை அதிகரித்துள்ளதால் லாரி குடிநீர் விநியோகத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது. அதன் அடிப்படையில் சனிக்கிழமைமுதல் (மே 11), 20 ஆயிரம், 9 ஆயிரம் மற்றும் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 21 டேங்கர் லாரிகள் கூடுதலாக குடிநீர் விநியோகப் பணிகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் 1.5 மில்லியன் லிட்டர் குடிநீரை நகரில் கூடுதலாக விநியோகிக்க முடியும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.