கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவா் கைது
தஞ்சாவூரில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நபரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூரில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நபரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூரில் கிழக்கு காவல் நிலையத்தினா் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்த ராஜேஷ் கண்ணனை பிடித்து விசாரித்தனா். இதில், அவரிடமிருந்து 15 கிலோ கஞ்சா, நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, ராஜேஷ் கண்ணனை காவல் துறையினா் கைது செய்தனா்.