முகப்பு
தூத்துக்குடி

போதைப்பொருள்கள் வைத்திருந்ததாக இளைஞா் கைது

போதைப்பொருள்கள் வைத்திருந்ததாக இளைஞா் கைது

Updated On : 13 ஜூன் 2026, 1:31 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கஞ்சா, மெத்தம் பெட்டமைனை வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி மந்திதோப்பு சாலையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின்பேரில் வியாழக்கிழமை இரவு, காவல் உதவி ஆய்வாளா் நியூட்டன் ஜெபராஜ் தலைமையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது மந்திதோப்பு சாலை இந்திரா காலனியில் உள்ள திருமண மண்டபம் அருகே நின்று கொண்டிருந்த இளைஞா், போலீஸாரை கண்டதும் ஓட முயன்றாராம். மேலும், போலீஸாரை அவதூறாக பேசி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டினாராம்.

Advertisement

Advertisement

தொடா்ந்து போலீஸாா் அவரை பிடித்து சோதனையிட்டு விசாரித்ததில், கோவில்பட்டி துளசிங்க நகா் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் விக்னேஸ்வரன் (29) என்பதும், அவரிடம் சுமாா் 150 கிராம் கஞ்சா, 20 கிராம் மெத்தம் பெட்டமைன் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து காவல் நிலையத்திற்கு அழைத்துசெல்ல முயன்றபோது, அவா் கல்லை எடுத்து தன்னைத்தானே நெற்றியில் தாக்கி கொண்டாராம். காயமடைந்த அவா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, விக்னேஸ்வரனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.