எஸ்.ஐ. மீது கும்பல் தாக்குதல்
சென்னை வியாசார்பாடியில் நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் மீது 3 பேர் கொண்ட கும்பல் தாக்கிவிட்டு தப்பியோடியது.
சென்னை வியாசார்பாடியில் நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் மீது 3 பேர் கொண்ட கும்பல் தாக்கிவிட்டு தப்பியோடியது.
இது குறித்த விவரம்:
சென்னை வியாசார்பாடி காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றுபவர் பாஸ்கரன் (56). இவர் ஊர்க்காவல் படையில் பணியாற்றும் பிரபாகரனுடன் திங்கள்கிழமை இரவு பைக்கில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
Advertisement
அப்போது வியாசார்பாடி பகுதியில் 3 பேர் குடிபோதையில் சாலையில் சத்தமாக பேசிக் கொண்டிருந்தனர். ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பாஸ்கரன் மற்றும் பிரபாகரன் ஆகியோர் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு கூறினர்.
ஆனால் அந்தக் கூட்டத்தில் இருந்த பூபாலன் என்பவர் பாஸ்கரனிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதையடுத்து பாஸ்கரன் மற்றும் பிரபாகரனை குடிபோதையில் இருந்த 3 பேர் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடினர். இது குறித்து வியாசர்பாடி காவல் நிலையத்தில் பாஸ்கரன் புகார் அளித்தார். சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய மூவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.