வியாபாரி கொலை: உறவினர் கைது
வியாபாரியை கொலை செய்ததாக அவரது உறவினரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
வியாபாரியை கொலை செய்ததாக அவரது உறவினரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், திருமுக்கூடல் பகுதியைச் சேர்ந்தவர் சூரியகுமார். "மினரல்' வாட்டர் வியாபாரியான இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை மர்மகும்பலால் கொலை செய்யப்பட்டார். இது குறித்து சூரியகுமாரின் உறவினரான சதீஷ் (32) என்பவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.÷இதில், சொத்து தகராறு காரணமாக சூரியகுமாரை கொலை செய்ததாக சதீஷ் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.