இடைநிலை ஆசிரியர் ஊதிய விவகாரம்: ஆகஸ்ட்7-ல் ஆர்ப்பாட்டம்
இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 7-ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.
இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 7-ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.
ஆறாவது ஊதியக் குழுவின் முரண்பாடுகளைக் களைந்து தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு ஜூலை 22-ல் அரசாணைகளை வெளியிட்டது. இதில் ஊதிய விகிதத்தில் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றமோ, தர ஊதிய மாற்றமோ பரிசீலனை செய்யப்படாதது ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இந்தப் பிரச்னை தொடர்பாக மூன்று கட்ட போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
Advertisement
முதல் கட்டமாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும், இரண்டாம் கட்டமாக செப்டம்பர் 14-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டமும், மூன்றாவது கட்டமாக உயர்நிலை, மேல்நிலைக் கல்வி ஆசிரியர்களை ஒருங்கிணைத்துக் கூட்டுப் போராட்டமும் நடத்தப்படும் என தமிழக ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது.