சர்க்கரை நோய் எதிர்ப்பு மாத்திரை தடை நீக்கம்: மத்திய அரசிதழில் வெளியீடு
நாடு முழுவதும் சர்க்கரை நோய் எதிர்ப்பு மாத்திரை பயோகிளிட்டúஸôனுக்கு விதிக்கப்பட்டடிருந்த தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.
நாடு முழுவதும் சர்க்கரை நோய் எதிர்ப்பு மாத்திரை பயோகிளிட்டúஸôனுக்கு விதிக்கப்பட்டடிருந்த தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.
இந்த மருந்தின் தடை நீக்கத்துக்கான அறிவிப்பை மத்திய சுகாதாரத் துறை அரசிதழில் புதன்கிழமை (ஜூலை 31) வெளியிட்டுள்ளது.
சர்க்கரை நோய் எதிர்ப்பு மாத்திரை பயோகிளிட்டோúஸôன் காரணமாக சிறுநீர்ப் பை புற்று நோய் ஏற்படும் எனக் கருதி சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு தடை விதித்தது. ஆனால், மலிவான விலையுடன் அதிக ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தக்கூடிய இந்த மாத்திரையை முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தாமல் தடை விதிப்பது சரி அல்ல என்று தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தடையை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
Advertisement
இந்த நிலையில் பயோகிளிட்டúஸôன் மாத்திரையின் பக்க விளைவுகள் குறித்து சிவப்பு எழுத்தில் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த மாத்திரையை மீண்டும் விற்பனை செய்யலாம் என்று மத்திய அரசு அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்கும் நிபுணர்களின் ஆலோசனையுடன் சர்க்கரை நோயாளிகள் இந்த மாத்திரையைச் சாப்பிடுவதன் மூலம் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது என்று சென்னையைச் சேர்ந்த சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் அ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.