முகப்பு
சென்னை

வீடு கட்ட "கிரீன் சேனல்' அனுமதி: இன்று தொடக்கம்

"கிரீன் சேனல்' மூலம் கட்டட அனுமதியளிக்கும் முறையை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கிறார்.

Updated On : 2 ஆகஸ்ட் 2013, 3:01 am IST
பகிர்:

"கிரீன் சேனல்' மூலம் கட்டட அனுமதியளிக்கும் முறையை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கிறார்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: சென்னை மாநகராட்சியில் வீடு கட்ட மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும். இப்போது இந்த அனுமதி வழங்க பல நாள்கள் ஆகின்றன என்று புகார் எழுந்து வருகிறது.

இந்த நிலையில் கட்டடங்களுக்கு அனுமதி கேட்போர், கட்டட வரைபடத்தில் விதிமுறை மீறப்படவில்லை என்றும், மீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உறுதியளிக்கும் முறையை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் பின்பற்றி வருகிறது. மேலும் இதன் மூலம் 7 நாள்களுக்குள் அனுமதி வழங்கப்படுகிறது.

Advertisement

Advertisement

கட்டுமான பணி தொடங்கிய பின்னர் கட்டடத்தை ஆய்வு செய்யும் அதிகாரிகள், விதி மீறல் இருந்தால் நடவடிக்கை எடுப்பார்கள். இது கிரீன் சேனல் முறை எனப்படுகிறது.

இந்த முறையை சென்னை மாநகராட்சியிலும் பின்பற்ற முடிவு செய்யப்பட்டது. இணையதளம் மூலம் நடைமுறைப்படுத்தும் இந்த முறையை வெள்ளிக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் மேயர் தொடங்கி வைக்கிறார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.