கைத்துப்பாக்கி பதுக்கிய வழக்கு: கோவையில் கிச்சான் புகாரியின் கூட்டாளிகள் மூவர் கைது
பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள கிச்சான் புகாரியுடன் தொடர்புடைய மேலும் மூவரை சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீஸார் கோவையில் கைது செய்தனர்.
பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள கிச்சான் புகாரியுடன் தொடர்புடைய மேலும் மூவரை சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீஸார் கோவையில் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் அருகே குண்டு வெடித்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட சேர்ந்த கிச்சான் புகாரிரியின் கைத் துப்பாக்கி கோவையில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.
இந் நிலையில்,கிச்சான்புகாரின்யின் கூட்டாளிகள் கோவை, என்.எச்.சாலை, திருமால் வீதியைச் சேர்ந்த அக்பர் மகன் சலாவுதின் (எ) இப்ராகிம் (32), என்.எச்.சாலை, சந்திரன் வீதியைச் சேர்ந்த அப்துல்சலாம் மகன் முகமது நிசார் (23), அப்துல் மஜீத் மகன் முன்னா (எ) முகமது ரபீக் (25) ஆகியோரை கைத்துப்பாக்கி பதுக்கிய வழக்கில் சிபிசிஐடி தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
Advertisement