முகப்பு
சென்னை

சென்னை விமான நிலையத்தில் 4 போலீஸ் சாவடிகள்

சென்னை விமான நிலையத்தில் நவீன வசதிகளுடன்கூடிய 4 போலீஸ் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவை விரைவில் திறக்கப்பட உள்ளன.

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 3:04 am IST
பகிர்:

சென்னை விமான நிலையத்தில் நவீன வசதிகளுடன்கூடிய 4 போலீஸ் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவை விரைவில் திறக்கப்பட உள்ளன.

உள்நாட்டு முனையத்தில் உள்ள புறப்பாடு, வருகை மற்றும் பன்னாட்டு முனையத்தில் உள்ள புறப்பாடு, வருகை பகுதிகளில் 4 போலீஸ் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. கம்ப்யூட்டர் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இந்த சாவடிகள் இயங்கும்.

ஒரு சாவடியில் 5 போலீஸார் நியமிக்கப்பட உள்ளனர். 3 பிரிவுகளாக 24 மணி நேரமும் இந்த போலீஸ் சாவடி செயல்படும். பயணிகள் தங்கள் பிரச்னைகளை நேரடியாக போலீஸ் நிலையத்துக்கு வராமல் போலீஸ் சாவடியில் புகார் செய்யலாம்.

Advertisement

Advertisement

விமான நிலையத்தில் உள்ள வாகன சோதனை மையம், சுங்கச்சாவடி, வாகனங்கள் நிறுத்தும் இடம், நடைபாதைகள், 4 போலீஸ் சாவடிகள் உள்பட 57 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ளனர்.

இந்த நவீன வசதிகள் கொண்ட புதிய போலீஸ் சாவடிகள் விரைவில் செயல்பட உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.