பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் 3 நாள்கள் தர்னா
ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் புதன்கிழமை முதல் மூன்று நாள்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் புதன்கிழமை முதல் மூன்று நாள்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதும் தொலைத்தொடர்பு ஊழியர்கள் முன்னேற்றச் சங்கம், தேசிய தொலைத்தொடர்பு சம்மேளனம், தேசிய தொலைத்தொடர்பு பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட ஆறு தொழிற்சங்கங்கள் தர்ணா போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.
அதன்படி புதன்கிழமை முதல் பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் மூன்று நாட்களுக்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் புதன்கிழமை புரசைவாக்கத்தில் உள்ள சென்னை தொலைபேசியின் தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பு 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
போராட்டம் குறித்து பி.எஸ்.என்.எல்., சங்கத்தினர் கூறியது: பி.எஸ்.என்.எல்., ஊழியர்களில் டெலிகாம் மெக்கானிக், அலுவலக உதவியாளர் ஆகியோரிடம் ஊதிய முரண்பாடுகள் காணப்படுகின்றன. ஏற்கெனவே ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட போனஸ், மருத்துவப்படி, சுற்றுலா படி போன்றவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை திரும்ப வழங்க வேண்டும். பணியின்போது இறக்கும் ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 20 கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளோம். நாடு முழுவதும் நடைபெறும் தர்னா போராட்டத்தில் ஒரு லட்சம் ஊழியர்கள் பங்கேற்று உள்ளதாக தெரிவித்தனர்.