விடியோ கான்ஃபரன்சிங் மூலம் பேரறிவாளனிடம் மாநில தகவல் ஆணையர் விசாரணை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனிடம் மாநில தலைமைத் தகவல் ஆணையர் விடியோ கான்ஃபரன்சிங் மூலம் புதன்கிழமை விசாரணை நடத்தினார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனிடம் மாநில தலைமைத் தகவல் ஆணையர் விடியோ கான்ஃபரன்சிங் மூலம் புதன்கிழமை விசாரணை நடத்தினார்.
வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் உள்ள பேரறிவாளன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில தகவல்கள் கோரி மாநில தகவல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்த கடிதம் மீதான விசாரணையை சென்னையில் உள்ள மாநில தகவல் ஆணைய மைய அலுவலகத்தில் இருந்து தலைமைத் தகவல் ஆணையர் ஸ்ரீபதி விடியோ கான்ஃபரன்சிங் மூலம் புதன்கிழமை மேற்கொண்
Advertisement
டார்.
இதையொட்டி வேலூர் மத்தியச் சிறையில் உள்ள பேரறிவாளன், சிறைக்குள் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருடன் வேலூர் மத்தியச் சிறை கூடுதல் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் இருந்தார்.
சுமார் 25 நிமிடம் இந்த விடியோ கான்ஃபரன்சிங் விசாரணை நடந்தது.