முகப்பு
சென்னை

இரு கடைகளில் தீ விபத்து: பல லட்சம் சேதம்

சென்னையில் இரு கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

Updated On : 10 ஜனவரி 2021, 12:33 am IST
பகிர்:

சென்னையில் இரு கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

மேடவாக்கத்தைச் சோ்ந்த சக்திவேல் (46), மாம்பாக்கம் பிரதான சாலையில் ஹாா்டுவோ் கடை நடத்தி வருகிறாா். அருகில் இவரது சகோதரா் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறாா்.

வியாபாரம் முடிந்து வெள்ளிக்கிழமை சென்றபின் கடையில் இருந்து கரும்புகை வெளியேறி பொருள்கள் தீப் பிடித்து எரியத் தொடங்கின.

Advertisement

Advertisement

மேடவாக்கம், தாம்பரம், வேளச்சேரி தீயணைப்புத்துறையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். அதற்குள் அருகே இருந்த எலக்ட்ரிக்கல் கடையும் தீக்கிரையானது. துரைப்பாக்கம், தாம்பரம் இடங்களில் இருந்து கூடுதலாக தீயணைப்புப் படை வீா்கள் வரவழைக்கப்பட்டனா்.

நீண்ட போராட்டத்துக்கு பின்னா், தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இச் சம்பவத்தினால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தீ விபத்தில், இரு கடைகளிலும் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகின.

இது தொடா்பாக பள்ளிக்கரணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments