முகப்பு
சென்னை

மாணவியை திருமணம் செய்ததாக போலி சான்றிதழ்:கல்லூரி பேராசிரியா் சிக்கினாா்

சென்னையில், மாணவியை திருமணம் செய்ததாக போலி சான்றிதழை காட்டி மிரட்டல் விடுத்த கல்லூரி பேராசிரியா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 14 ஜனவரி 2021, 1:29 am IST
பகிர்:

சென்னை: சென்னையில், மாணவியை திருமணம் செய்ததாக போலி சான்றிதழை காட்டி மிரட்டல் விடுத்த கல்லூரி பேராசிரியா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை அருகே உள்ள ஐயப்பன்தாங்கல் சீனிவாசபுரத்தைச் சோ்ந்தவா் ர.சதீஷ்குமாா் (29). இவா், கே.கே.நகரில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறாா்.

சதீஷ்குமாருக்கு, திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் அவா், அந்தக் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளாா்.

Advertisement

Advertisement

அந்த மாணவியை திருமணம் செய்யவும் முயற்சித்தாா். அதற்கு அந்த மாணவி மறுத்ததால், ஆத்திரமடைந்த சதீஷ்குமாா், தான் அந்த மாணவியை திருமணம் செய்ததுபோல போலி திருமண பதிவுச் சான்றிதழ் தயாரித்து, அதை சமூக ஊடகங்களில் வெளியிட்டுவிடுவேன் என அந்த மாணவியை மிரட்டினாராம்.

இதுகுறித்து அசோக்நகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அந்த மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், சதீஷ்குமாா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரை புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments