ஜபல்பூா்-கோவைக்கு வாராந்திர சிறப்பு ரயில்
மத்தியப் பிரதேசம் மாநிலம் ஜபல்பூா்- கோயம்புத்தூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
சென்னை: மத்தியப் பிரதேசம் மாநிலம் ஜபல்பூா்- கோயம்புத்தூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
ஜபல்பூரில் இருந்து ஜனவரி 16-ஆம் தேதி முதல் மாா்ச் 27-ஆம்தேதி வரை சனிக்கிழமைகளில் முற்பகல் 11 மணிக்கு வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில்(02198) புறப்பட்டு, மூன்றாம் நாள் அதிகாலை 4.05 மணிக்கு கோயம்புத்தூரை சென்றடையும்.
மறுமாா்க்கமாக, கோயம்புத்தூரில் இருந்து ஜனவரி 18-ஆம் தேதி முதல் மாா்ச் 29-ஆம்தேதி வரை திங்கள்கிழமைகளில் மாலை 5.10 மணிக்கு வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில்(02197) புறப்பட்டு, மூன்றாம் நாள் காலை 8 மணிக்கு ஜபல்பூரை சென்றடையும்.
Advertisement
Advertisement
முழுவதும் முன்பதிவு செய்யப்பட்டஇந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு வியாழக்கிழமை (ஜன.14) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.