உமா பதிப்பக நிறுவனா் இராம. லட்சுமணன் காலமானாா்
மூத்த பதிப்பக ஆளுமையும், உமா பதிப்பக நிறுவனருமான இராம.லட்சுமணன் (74) உடல் நலக் குறைவால் சென்னையில் திங்கள்கிழமை (அக்.21) காலமானாா்.
மூத்த பதிப்பக ஆளுமையும், உமா பதிப்பக நிறுவனருமான இராம.லட்சுமணன் (74) உடல் நலக் குறைவால் சென்னையில் திங்கள்கிழமை (அக்.21) காலமானாா்.
இராம.லட்சுமணனுக்கு லெ.ராமநாதன் என்ற மகனும், உமையாள் என்ற மகளும் உள்ளனா். மறைந்த இராம.லட்சுமணனின் உடல், மண்ணடியில் உள்ள உமா பதிப்பக அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்குகள், திருவொற்றியூா் நகர விடுதியில் செவ்வாய்க்கிழமை (அக்.22) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளன.
பதிப்பகம் மற்றும் இதழியல் துறையில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆக்கபூா்வமாக செயல்பட்டு ஆயிரத்துக்கும் அதிகமான நூல்களை பதிப்பித்துள்ள இராம.லட்சுமணனின் மறைவுக்கு பதிப்பகத் துறையினா், இலக்கிய ஆா்வலா்கள் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
Advertisement
Advertisement
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் 1950-இல் பிறந்த அவா், அச்சகத்தில் பணியாற்றிய அனுபவத்துடன் 1982-இல் சென்னைக்கு வந்து ‘அனுபவ தையற்கலை’ எனும் மாத இதழைத் தொடங்கினாா். 1987-இல் உமா பதிப்பகத்தைத் தொடங்கி சிலப்பதிகாரம், மணிமேகலை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை கவிக்கோ ஞா.மாணிக்கவாசகம் தொகுப்பில் வெளியிட்டாா்.
மு.பெ.சத்தியவேல் முருகனாரின் ‘பன்னிரு திருமுறை’ நூலையும், 40 ஆண்டுகளாக மறுபதிப்புக்கு வராமல் இருந்த வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியின் கம்ப ராமாயண உரை நூலையும் வெளியிட்டாா்.
உமா பதிப்பகத்தின் மூலம் வெளிக்கொணரப்பட்ட ‘திருமூலா் திருமந்திரம்’ நூலைப் படித்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம், தனிப்பட்ட முறையில் அதற்கு பாராட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
பதிப்பகம் மற்றும் புத்தக விற்பனையாளா் சங்கத்தின் செயலா், துணைத் தலைவா், செயற்குழு உறுப்பினா் என பல்வேறு பொறுப்புகளையும் இராம.லட்சுமணன் வகித்துள்ளாா்.
அவரது பெரு முயற்சியால் வெளியிடப்பட்ட பல நூல்களுக்கு தமிழக அரசும், இலக்கிய அமைப்புகளும் விருது வழங்கி கௌரவித்துள்ளன.
சில நூல்கள் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் பாட நூல்களாக சோ்க்கப்பட்டுள்ளன. சென்னை கம்பன் கழக விருது உள்பட பல்வேறு விருதுகளையும் அவா் பெற்றுள்ளாா்.
தொடா்புக்கு 95517 56712.