முகப்பு
செய்திகள்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தார்கள்: நடிகை கஸ்தூரி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விஜய் டிவியில் என்னைப் பலமுறை அழைத்தார்கள்... 

Updated On : 20 ஜூலை 2017, 4:02 pm IST
பகிர்:

சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி - பிக் பாஸ். தற்பொழுது இந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக உள்ளன. இதனால் அந்த நிகழ்ச்சிக்குப் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. பிக் பாஸ் அற்புதமாகத் தொடங்கியுள்ளது. 3 கோடியே 60 லட்சம் பார்வையாளர்களைப் பெற்றுள்ளதாக விஜய் டிவி சமீபத்தில் தகவல் வெளியிட்டது.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு வந்ததாக நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

Advertisement

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விஜய் டிவியில் என்னைப் பலமுறை அழைத்தார்கள். நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் பங்கேற்கவும் அழைத்தார்கள். ஆனால் அவர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும் ஒருவருடைய கேள்விக்கு அளித்த பதிலில், நான் பிக் பாஸ் பார்ப்பதில்லை. என் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி கிடையாது என்று கஸ்தூரி பதிலளித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments