''இந்தியாவை நேசிக்கிறேன், அரசாங்கத்தை அல்ல'' - சர்ச்சையாகும் பி.சி.ஸ்ரீராமின் பதிவு
இந்தியாவை நேசிக்கிறேன், அரசாங்கத்தை அல்ல என பி.சி.ஸ்ரீராம் பதிவிட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது.
'இந்தியாவை நேசிக்கிறேன், அரசாங்கத்தை அல்ல' என பி.சி.ஸ்ரீராம் பதிவிட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியேற்றி கொண்டாடி வருகின்றனர். அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து தேசப்பக்தியை வெளிப்படுத்திவருகின்றனர்.
திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் தங்கள் ரசிகர்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில், ''நான் இந்தியாவை நேசிக்கிறேன். ஆனால் அரசை அல்ல. ஜெய்ஹிந்த்'' என ட்வீட் செய்துள்ளார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | சூர்யா - கார்த்தியின் 'விருமன்' படம் எப்படி இருக்கிறது ? - விமர்சனம்
இதனையடுத்து அரசு பிடிக்கவில்லை என்றால் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என பாஜக ஆதரவாளர்கள் அவரது பதிவுக்கு கமெண்ட் செய்துவருகிறார்கள். ஒரு சிலர் மோசமான வார்த்தைகளாலும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.