டாக்ஸிக் புதிய அறிவிப்பு!
டாக்ஸிக் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது...
நடிகர் யஷ் நடிப்பில் உருவாகும் டாக்ஸிக் படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கேஜிஎஃப், கேஜிஎஃப் - 2 படங்களில் நடித்து இந்திய சினிமாவில் ஸ்டாரானவர் நடிகர் யஷ். உலகளவில் கவனம் ஈர்த்த இப்படம் ரூ.1000 கோடிக்கு அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
தொடர்ந்து, யஷ் மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் தன் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: தென்னாப்பிரிக்காவில் ராஜமௌலி - மகேஷ் பாபு படத்தின் படப்பிடிப்பு?
டாக்ஸிக் (Toxic) எனப் பெயரிட்டுள்ள இப்படம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேவிஎன் புரோடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
இந்த நிலையில், டாக்ஸிக் படத்தின் புதிய அறிவிப்பு நாளை மறுநாள் (ஜன.8) காலை 10.25 மணிக்கு வெளியாகும் என குறிப்பிட்டு போஸ்டர் ஒன்றைப் பகிர்ந்துள்ளனர்.
இந்த அறிவிப்பு படத்தின் வெளியீட்டுத் தேதியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.