முகப்பு
செய்திகள்

அந்தப் பாடலுக்கே ரசிகர்கள் செலவிடும் பணம் சரியாக இருக்கும்: எஸ். ஜே. சூர்யா

கேம் சேஞ்ஜர் குறித்து எஸ். ஜே. சூர்யா...

Updated On : 7 ஜனவரி 2025, 12:57 pm IST
பகிர்:

கேம் சேஞ்ஜரின் அந்தப் பாடலுக்கே ரசிகர்கள் செலவிடும் பணம் சரியாக இருக்கும் என நடிகர் எஸ். ஜே. சூர்யா தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் எஸ். ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

Advertisement

Advertisement

புரமோஷன்கள் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில் தற்போது முன்பதிவு துவங்கியுள்ளது.

இந்த நிலையில், நேர்காணலில் பங்கேற்ற நடிகர் எஸ்ஜே சூர்யா, ”கேம் சேஞ்ஜர் திரைப்படத்தை இயக்குநர் ஷங்கர் மிக பிரம்மாண்டமாக எடுத்துள்ளார். அப்படத்தில் இடம்பெற்ற ’ஜருகண்டி’ பாடலை முழுமையாகப் பார்த்தேன். ரசிகர்களின் காசு அந்த ஒரு பாடலுக்கே சரியாகப்போய்விடும்.

என்னவொரு பாட்டு, மிரட்டிவிட்டார். கண்டிப்பாக, அந்தப் பாடலுக்காக ஐமேக்ஸ் சென்று பாருங்கள். ராம் சரண், கியாரா அத்வானி படத்திற்காக வாங்கிய சம்பளம் அந்த ஒரு பாடலுக்கே சரியாகிவிட்டது. ராம் சரணை பெண்களும் கியாரா அத்வானியை ஆண்களும் அதிகம் விரும்புவார்கள். மொத்த படமும் போனஸாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments