முகப்பு
செய்திகள்

கெட்டி மேளம் தொடரின் நிறைவு நாள் படப்பிடிப்பு படங்கள்! இணையத்தில் வைரல்!

கெட்டி மேளம் தொடரின் நிறைவு நாளில் எடுக்கப்பட்ட படங்கள் வைரலாகி வருவது தொடர்பாக...

Updated On : 24 ஜூன் 2026, 1:20 pm IST
கெட்டி மேளம் தொடரின் நிறைவுநாள் படப்பிடிப்பு படங்கள். - படம்: இன்ஸ்டாகிராம்
பகிர்:

கெட்டி மேளம் தொடரின் நிறைவு நாள் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2025 ஜனவரியில் ஆரம்பிக்க இந்தத் தொடர், திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

கெட்டி மேளம் தொடரின் நிறைவுநாள் படப்பிடிப்பு படங்கள். - படம்: இன்ஸ்டாகிராம்

லக்‌ஷ்மி நிவாசா என்ற கன்னட மொழித் தொடரின் மறு உருவாக்கமாக எடுக்கப்பட்டு வரும் இத்தொடர், கூட்டுக் குடும்பத்தை மையப்படுத்தி கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கெட்டி மேளம் தொடரின் நிறைவுநாள் படப்பிடிப்பு படங்கள். - படம்: இன்ஸ்டாகிராம்

கெட்டி மேளம் தொடரில் ஸ்ரீகுமார், சாயா சிங், ஸ்ரீகுமார் , விராட், செளந்தர்யா ரெட்டி, பிரவீனா, பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

சொந்தமாக வீடு கட்டி மகள்களுக்கு நல்ல முறையில் திருமணம் செய்து வைக்க நினைக்கும் பெற்றோர், குடும்பப் பொறுப்புகளுக்கு மத்தியில் இவர்களது சொந்த வீடு கனவு என்னவாகிறது என்பதுதான் கதை.

இந்த நிலையில் கெட்டி மேளம் தொடர் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில், இந்தத் தொடரின் இறுதிநாள் படப்பிடிப்பு அண்மையில் நடைபெற்றது.

கெட்டி மேளம் தொடரின் நிறைவுநாள் படப்பிடிப்பு படங்கள். - படம்: இன்ஸ்டாகிராம்

அப்போது, இந்தத் தொடரில் நடித்த நடிகர்கள் ஒன்றாக சேர்ந்து குழுப்படங்களை எடுத்துக்கொண்டனர். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கெட்டி மேளம் தொடரின் கிளைமேக்ஸ் காட்சிகள், கூடிய விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.

Photos taken during the final day of shooting for the Ketti Melam series are going viral on the internet.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments