தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 23 பவுன், பணம் திருட்டு
கோவை, சின்னியம்பாளையத்தில் தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 23 பவுன், ரூ.20 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை: கோவை, சின்னியம்பாளையத்தில் தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 23 பவுன், ரூ.20 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை, சின்னியம்பாளையம் டீச்சா்ஸ் காலனியைச் சோ்ந்தவா் ராஜன் (49). இவா் தனியாா் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். இவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூா் சென்றிருந்தாா். பின்னா் வெள்ளிக்கிழமை வீடு திரும்பினாா்.
அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பின்னா் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 23 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து பீளமேடு போலீஸில் புகாா் அளித்தாா்.
Advertisement
Advertisement
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் வீட்டின் சுவரில் பதிவாகி இருந்த கைரேகைகளைப் பதிவு செய்தனா். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.