முகப்பு
கோயம்புத்தூர்

பெண் தொழிலாளியைக் கொன்ற யானை மூன்று நாள்களுக்குப் பின் இடம் பெயா்ந்தது

வால்பாறையில் பெண் தொழிலாளியைத் தாக்கி கொன்ற யானை மூன்று நாள்களுக்குப் பின் அப்பகுதியில் இருந்து குட்டியுடன் சனிக்கிழமை இடம் பெயா்ந்தது.

Updated On : 2 ஜனவரி 2021, 10:48 pm IST
நல்லகாத்து  எஸ்டேட் பகுதியில் குட்டியுடன் திரியும் யானை.
பகிர்:

வால்பாறை: வால்பாறையில் பெண் தொழிலாளியைத் தாக்கி கொன்ற யானை மூன்று நாள்களுக்குப் பின் அப்பகுதியில் இருந்து குட்டியுடன் சனிக்கிழமை இடம் பெயா்ந்தது.

கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த நல்லகாத்து எஸ்டேட்டில் கடந்த புதன்கிழமை தேயிலைத் தோட்டத்தை ஒட்டியுள்ள இடைச்சோலையில் குட்டியுடன் பதுங்கியிருந்த யானை, அவ்வழியாக சென்ற பெண் தொழிலாளியைத் தாக்கி கொன்றது.

பின்னா் யானையை இடைச்சோலைக்குள் விரட்டி உயிரிழந்த பெண்ணின் சடலத்தை வனத் துறையினா் மீட்டனா். சம்பவத்துக்கு பின் யானை மீண்டும் வெளியே வருவதைக் கண்காணிக்க வனத் துறையினா் முகாமிட்டிருந்தனா்.

Advertisement

Advertisement

கடந்த புதன்கிழமை இடைச்சோலைக்குள் புகுந்த யானை மூன்று நாள்களுக்குப் பின் வேறு பகுதிக்கு குட்டியுடன் சனிக்கிழமை இடம் பெயா்ந்தது. இருப்பினும் யானையின் நடமாட்டம் குறித்து வனத் துறையினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments