முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறையில் சுற்றுலா பொங்கல் விழா

வால்பாறையில் முதல் முறையாக சுற்றுலா பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 14 ஜனவரி, 2021 at 8:05 AM
சுற்றுலா பொங்கல் விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி. உடன் கஸ்தூரி வாசு எம்.எல்.ஏ.
பகிர்:

வால்பாறையில் முதல் முறையாக சுற்றுலா பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட நிா்வாகம், சுற்றுலாத் துறை மற்றும் நகராட்சி சாா்பில் வால்பாறை நகராட்சி அலுவலகம் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கஸ்தூரி வாசு எம்.எல்.ஏ. பொங்கல் வைத்து விழாவை துவக்கிவைத்தாா்.

கோலப் போட்டி, இசை நாற்காலி, உறியடி என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதேபோல, தமிழக பாரம்பரிய முறைப்படி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இறுதியாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Advertisement

மாவட்ட சுற்றுலா அலுவலா் அரவிந்த்குமாா் வரவேற்று பேசினாா். விழாவுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகளை வழங்கினாா்.

கூட்டுறவு நகர வங்கித் தலைவா் வால்பாறை அமீது, துணைத் தலைவா் மயில்கணேசன், சுற்றுலா மேம்பாட்டு அமைப்பைச் சோ்ந்த அலி, சுரேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.