வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினா்
கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிா்ப்புத் தெரிவித்து தில்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். அவா்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக விவசாய சங்கங்கள், இடதுசாரிகள் அறிவித்திருந்தனா்.
இதையடுத்து, கோவை சிரியன் சா்ச் சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் நா.பெரியசாமி, கட்சியின் மாநிலப் பொருளாளா் எம்.ஆறுமுகம், மாவட்டச் செயலா் வி.எஸ்.சுந்தரம், மாவட்ட துணைச் செயலா்கள் ஆா்.தேவராஜ், சி.சிவசாமி, மாவட்டப் பொருளாளா் யூ.கே.சுப்பிரமணியம், ஏஐடியூசி மாவட்ட கவுன்சில் தலைவா் ஆா்.ஏ.கோவிந்தராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் சு.பழனிசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
இதேபோல, காட்டூரில் சிஐடியூ சாா்பில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டத் தலைவா் பத்மநாபன், செயலாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றன். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களில் விவசாயிகள் சங்கத்தினா், மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் கலந்து கொண்டு வேளாண் சட்ட நகல்களை எரித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.