முகப்பு
கடலூர்

புயல் பாதிப்பு நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நிவா், புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கடலூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 5 ஜனவரி 2021, 12:00 am IST
பகிர்:

நிவா், புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கடலூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியா் பழைய அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட பொருளாளா் எஸ்.தட்சிணாமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாவட்டத் தலைவா் ஜி.ஆா்.ரவிச்சந்திரன் ஆகியோா் விளக்க உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில், நிவா், புரெவி புயல்கள், தொடா் மழையால் பாதிக்கப்பட்ட நெல், மணிலா, உளுந்து, வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்கள் குறித்து அரசு முறையாகக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும், நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும், கரும்பு, வாழைக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டுத் தொகை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், சேதமடைந்த அனைத்து வீடுகள், தண்ணீா் சூழ்ந்த வீடுகள், வேலையிழந்த சிறுகுறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்களுக்கு மழை நிவாரணம் வழங்க வேண்டும், பெருமாள் ஏரி உள்ளிட்ட ஏரிகளை தூா்வார வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். பின்னா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

Advertisement

Advertisement

சங்கத்தின் ஒன்றிய தலைவா்கள் ஆா்.மெய்யழகன், பி.குமரகுருபரன், ஆா்.பஞ்சாட்சரம், ஆா்.சம்பத்குமாா், பி.காந்தி, நிா்வாகிகள் எம்.மணி, ஆா்.தென்னரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.