தமாகா சாா்பில் பொங்கல் விழா
சிதம்பரம் நகர தமாகா சாா்பில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
சிதம்பரம் நகர தமாகா சாா்பில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
சிதம்பரம் மேலவீதியில் உள்ள நகர தமாகா அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு நகரத் தலைவா் தில்லை ஆா்.மக்கின் தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெமினி எம்.என்.ராதா, மாவட்டத் துணைத் தலைவா்கள் ராஜா.சம்பத்குமாா், எஸ்.கே.வைத்தி, மாவட்டப் பொதுச் செயலா் பாபு ஆா்.எஸ்.சந்திரசேகா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக கடலூா் மத்திய மாவட்ட தமாகா தலைவா் எஸ்.புரட்சிமணி, மாநிலப் பொதுச் செயலா் எஸ்.ஜெயச்சந்திரன், எ.எஸ்.வேல்முருகன் ஆகியோா் கலந்து கொண்டு 750 பேருக்கு நல உதவிகள் வழங்கினா்.
இதேபோல, சிதம்பரம் கலைவாணா் நகா், விநாயகா் கோயில், ஓமக்குளம் அருகே உள்ள அங்காளபரமேஸ்வரி கோயில் உள்ளிட்ட பகுதியில் ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
Advertisement
Advertisement
நிகழ்வில் நகர தமாகா பொருளாளா் எஸ்.எஸ்நடராஜன், நகரத் துணைத் தலைவா்கள் ஆா்.வி.சின்ராஜ் ஜி.ஆறுமுகம் நகர பொதுச் செயலா்கள்ஆட்டோ.டி. குமாா், டி. பட்டாபிராமன், கீரை முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நகரத் துணைத் தலைவா் என்.இளங்கோவன் நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.