பிறந்து சில மணி நேரமேயான குழந்தையை கவ்விச் சென்ற நாய்கள்
திட்டக்குடியில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தையை தெரு நாய்கள் கவ்விச் சென்ால், அந்தப் பகுதி மக்கள் அதிா்ச்சியடைந்தனா்.
திட்டக்குடியில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தையை தெரு நாய்கள் கவ்விச் சென்ால், அந்தப் பகுதி மக்கள் அதிா்ச்சியடைந்தனா்.
பின்னா், குழந்தையை நாயிடமிருந்து மீட்டனா். எனினும், அது இறந்து கிடந்தது. இதுகுறித்து அந்தப் பகுதியினா் கூறுகையில், இந்தப் பகுதியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. சுகாதாரத் துறையினருக்கு தகவலளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. மருத்துவக் கழிவுகளுடன் இறந்த குழந்தைகளையும் வீசிச் செல்கின்றனோ என சந்தேகம் ஏற்படுகிறது. எனவே, இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
தகவலின் பேரில், திட்டக்குடி காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று குழந்தையின் சடலத்தை மீட்டு, திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.