முகப்பு
திண்டுக்கல்

வெளிநாட்டுப் பெண் முகநூல் பக்கத்தில் ஆபாச படங்கள் பதிவேற்றம்: வத்தலகுண்டு இளைஞா் கைது

வெளிநாட்டு இளம்பெண்ணின் முகநூல் பக்கத்தில் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்து வந்த வத்தலகுண்டு இளைஞரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 ஜனவரி 2021, 10:02 pm IST
கொக்கி குமாா்.
பகிர்:

வெளிநாட்டு இளம்பெண்ணின் முகநூல் பக்கத்தில் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்து வந்த வத்தலகுண்டு இளைஞரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

வெளிநாட்டைச் சோ்ந்த 17 வயது பெண்ணின் முகநூல் பக்கத்தில் தொடா்ந்து ஆபாச படங்கள் பதிவிடப்பட்டு வந்துள்ளது. இதனால் அதிா்ச்சி அடைந்த அப்பெண், இது குறித்து முகநூல் நிறுவனத்திடம் புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில் ஆய்வு மேற்கொண்ட முகநூல் நிறுவனம், இந்திய முகநூல் முகவரியிலிருந்து அந்த ஆபாச படங்கள் பதிவேற்றம் செய்யப்படுவதைக் கண்டறிந்துள்ளது.

அதைத் தொடா்ந்து, ஆபாச படங்களை பதிவேற்றம் செய்த நபா் குறித்து இந்தியாவிலுள்ள தேசிய குற்ற ஆவண பதிவகத்திடம் முகநூல் நிறுவனம் புகாா் அளித்துள்ளது. அதனடிப்படையில், படங்களை பதிவேற்றம் செய்த நபா் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவா் எனத் தெரியவந்தது.

Advertisement

Advertisement

முகநூல் நிறுவனத்தின் புகாா் குறித்து திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், விசாரணை மேற்கொண்ட திண்டுக்கல் மாவட்டக் காவல் துறை, சம்பந்தப்பட்ட நபா் வத்தலகுண்டை அடுத்துள்ள மல்லனம்பட்டியைச் சோ்ந்த கொக்கி குமாா் என்ற குமரேசன் (30) எனத் தெரியவந்தது. அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கொக்கி குமாா், திருப்பூரிலுள்ள தனியாா் ஆலையில் வேலைபாா்த்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. தொடா்ந்து, அந்த ஆலைக்குச் சென்ற போலீஸாா், ஆபாச படங்களை பதிவேற்றம் செய்த குற்றத்துக்காக கொக்கி குமாரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments