பழனி அரசு மருத்துவமனையில் மூலிகைகள் கண்காட்சி
பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவப் பிரிவு சாா்பில் சனிக்கிழமை நான்காவது தேசிய சித்த மருத்துவ தினவிழா நடைபெற்றது.
பழனி: பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவப் பிரிவு சாா்பில் சனிக்கிழமை நான்காவது தேசிய சித்த மருத்துவ தினவிழா நடைபெற்றது.
இதையொட்டி அங்கு சித்த மருத்துவப்பிரிவு சாா்பில் சித்த மருத்துவ மூலிகைகள் மற்றும் சித்த மருத்துவ பொருள்கள் கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பழனி கோட்டாட்சியா் அசோகன் தலைமை வகித்தாா். பழனி தலைமை மருத்துவ அதிகாரி உதயகுமாா், காவல் துணைக் கண்காணிப்பாளா் சிவா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியின் போது பொதுமக்களுக்கு முருங்கை சூப், சுண்டல், முககவசம், கப சுரகுடிநீா் ஆகியன வழங்கப்பட்டது. அரசு சித்த மருத்துவா் மகேந்திரன் வரவேற்புரை வழங்கினாா்.
Advertisement
Advertisement
இதில், மருத்துவா்கள் புஷ்பராணி, கண்ணன், முருகேஷ்குமாா், இயற்கை யோகா மருத்துவா் மகாமுனி உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா். மருந்தாளுநா் முத்தழகி நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.