முகப்பு
உலகம்

அமெரிக்க வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடி... அமெரிக்க ராணுவ நிலைகளை குறிவைக்கும் ஈரான்!

அமெரிக்க வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக அமெரிக்க ராணுவ நிலைகளை குறிவைக்கும் ஈரான் குறித்து..

Updated On : 27 ஜூன் 2026, 10:29 am IST
அமெரிக்க ராணுவ நிலைகளை குறிவைக்கும் ஈரான் - கோப்புப்படம்
பகிர்:

தெஹ்ரான்: ஈரானின் கடலோரப் பகுதிகள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அந்த பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை குறிவைத்து ஈரான் தாக்கியதாக இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் கடற்படை அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், ஈரானின் நாடாளுமன்ற உறுப்பினரான இப்ராஹிம் அஜிசி கூறுகையில், அமெரிக்கா போர்நிறுத்த ஒப்பந்தத்தைக் கடைப்பிடிப்பதில்லை என்றும், மற்றவர்கள் மீது பழிபோடும் உத்தி இனி பலனளிக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் 'எக்ஸ்' பக்க பதிவில், "பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. பேச்சுவார்த்தை அல்லது போர்நிறுத்தக் கொள்கைகளில் தனக்கு எந்த ஈடுபாடும் இல்லை என்பதைத் தோல்வியடைந்த அமெரிக்க அதிபர் வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

போர்நிறுத்தத்தை மீறும் இந்த பொறுப்பற்ற செயல், எப்போதும் போலவே, அவர்களுக்குப் பின்னடைவையும் வருத்தத்தையும் மட்டுமே தரும். மற்றவர்கள் மீது பழிபோடும் உத்தி இனி பலனளிக்காது" என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் செயல்படுத்தப்படும் விதம் குறித்து ஈரானுக்கு ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால், அவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறினார்.

இது குறித்து அவர் 'எக்ஸ்' பக்க பதிவில், ஈரான் ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. நாங்கள் அதை மதித்து நடந்துள்ளோம். புரிந்துணர்வு ஒப்பந்தம் செயல்படுத்தப்படும் விதம் குறித்து அவர்களுக்கு ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால், அவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம். ஆனால் வன்முறைக்கு வன்முறை மூலமே பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

முன்னதாக, இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையிலான முத்தரப்பு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கையெழுத்திட்டார்.

'எக்ஸ்' பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே இன்று கையெழுத்தான வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு கட்டமைப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் அமெரிக்கா பெருமை கொள்கிறது. இன்னும் செய்ய வேண்டிய பணிகள் உள்ளன; இருப்பினும், அமைதி, வளம் மற்றும் பரஸ்பர நல்லிணக்கம் கொண்ட எதிர்காலத்தை நோக்கி நாங்கள் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்," என்று கூறியுள்ளார்.

இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை மற்றும் வழக்கமான ஈரான் ராணுவம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் செயல்பாட்டுக் கட்டளை மையமான 'கதம் அல்-அன்பியா' மத்திய தலைமையகத்தின் அதிகாரப்பூர்வ ராணுவ செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் அல்-ஃபிகார் கூறுகையில், "அமெரிக்கத் தாக்குதலுக்கு" ஈரான் அளிக்கவிருக்கும் பதிலடி இந்த முறை முன்னெப்போதும் இல்லாத வகையில் இருக்கும் என்று கூறியுள்ளார்.

'எக்ஸ்' பக்கத்தில் அவர் வெளியிட்ட தொடர் பதிவுகளில், தெற்கு லெபனானில் சியோனிச அமைப்பு போர்நிறுத்தத்தை மீறியதற்கும், வாஷிங்டன் தனது வாக்குறுதிகளை மீறியதற்கும் சில மணிநேரங்களுக்குப் பின்னரே அமெரிக்காவின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை நிகழ்ந்துள்ளது. இடி போன்ற தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்; ஏனெனில் இன்று இரவு உங்களைப் பாதுகாக்க யாரும் இருக்கப்போவதில்லை என்று கூறினார்.

summary

The Islamic Revolutionary Guard Corps Navy announced that it has targeted US military positions in the region in retaliation for American airstrikes...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments