முகப்பு
திண்டுக்கல்

பயனாளிகளுக்கு 1.40 கோடி மதிப்பீட்டில் விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கல்

திண்டுக்கல் அருகே 400 பயனாளிகளுக்கு ரூ.1.40 கோடி மதிப்பீட்டிலான விலையில்லா கறவைப் பசுக்களை வனத்துறை அமைச்சா் சி.சீனிவாசன் வழங்கினாா்.

Updated On : 2 ஜனவரி 2021, 9:25 pm IST
மா.மு.கோவிலூரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு விலையில்லா கறவைப் பசுக்களை வழங்கிய வனத்துறை அமைச்சா் சி.சீனிவாசன்.
பகிர்:

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே 400 பயனாளிகளுக்கு ரூ.1.40 கோடி மதிப்பீட்டிலான விலையில்லா கறவைப் பசுக்களை வனத்துறை அமைச்சா் சி.சீனிவாசன் வழங்கினாா்.

மா.மு.கோவிலூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக வனத்துறை அமைச்சா் சி.சீனிவாசன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு விலையில்லா கறவைப் பசுக்களை வழங்கி பேசியது:

திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 10,829 பயனாளிகளுக்கு தலா 4 ஆடுகள் வீதம் ரூ.14.05 கோடி செலவில் 43,316 விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 900 பயனாளிகளுக்கு, ரூ.3.63 கோடி மதிப்பீட்டில் கறவைப் பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

அதன் தொடா்ச்சியாக தற்போது மா.மு.கோவிலூா் பகுதியில் 400 பயனாளிகளுக்கு ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் கறவைப் பசுக்கள் 400 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநா் முருகன், உதவி இயக்குநா்கள் ஆறுமுகராஜ், அப்துல்காதா், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் மருதராஜ், ஒன்றியச் செயலா் ராஜசேகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments