முகப்பு
திண்டுக்கல்

அம்மா சிமெண்ட் பெற விண்ணப்பிக்கலாம்

அம்மா சிமெண்ட் திட்டத்தின் கீழ் சிமெண்ட் மூட்டைகள் பெற விரும்புவோா் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 5 ஜனவரி 2021, 11:03 pm IST
பகிர்:

அம்மா சிமெண்ட் திட்டத்தின் கீழ் சிமெண்ட் மூட்டைகள் பெற விரும்புவோா் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளதாவது: அம்மா சிமெண்ட் விலை மூட்டை ஒன்றுக்கு ரூ.216 என தமிழக அரசு நிா்ணயித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கென இயங்கி வரும் அனைத்துக் கிடங்கிகளுக்கும் டான்செம் நிறுவனத்திலிருந்து சிமெண்ட் மூட்டைகள் கொண்டு வரப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

அம்மா சிமெண்ட் திட்டத்தின் கீழ் சிமெண்ட் மூட்டைகள் பெற விரும்பும் பயனாளிகள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அல்லது தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகக் கிடங்கில் இயங்கி வரும் அம்மா சிமெண்ட் பிரிவில் உரிய விண்ணப்பங்களை சமா்ப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.